விழுப்புரம் : விழுப்புரத்தில் ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்ற வந்தார்.இதில், விழுப்புரம், கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் நிதியளித்தனர்.நிதியை பெற்றுக்கொண்ட வைகோ, தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் சிறப்புரையாற்றுவார் என கட்சியினர் ஆர்வமுடன் காத்திருந்தனர்.ஆனால், நிதியை பெற்ற வைகோ பேசுகையில், அதிக நிதி கொடுத்துள்ளீர்கள்.என்னை நம்பி வந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என உரையை முடித்துக்கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE