கடலுார் : கடலுார், வன்னியர்பாளையத்தில் மழைநீர் வடிகால் பணியை முடிக்காமல் கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கடலுார், வன்னியர்பாளையம் காமராஜர் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. ஆனால், பணி கிடப்பில் போடப்பட்டது. ஒப்பந்ததாரர்கள், மழைநீர் வடிகால் அமைப்பதற்காக போடப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை நேற்று மாலை 4:00 மணிக்கு லாரியில் ஏற்ற வந்தனர்.அப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர், பணியை முடிக்காமல் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேறு இடத்தில் வடிகால் அமைப்பதற்கு பதிலாக தவறுதலாக இந்த இடத்தில் அமைக்கப்பட்டதால் பொருட்களை கொண்டு செல்ல வந்ததாக ஒப்பந்தாரர் கூறினார்.
இதனை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.ஒப்பந்ததாரர் வேறு வழியின்றி பொருட்களை கீழே இறக்கியதால் பொதுமக்கள் 4:30 மணிக்கு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE