சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். இதன் விலையை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வு எனக்கும் தர்மச்சங்கடமாக உள்ளது. நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால், எதுவும் செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE