தஞ்சாவூர்:கும்பகோணத்தை, தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நேற்று பொதுமக்கள் சார்பில் பேரணி நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி, தனி மாவட்டம் கோரும் போராட்டக்குழு சார்பில், பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ - மாணவியர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், மொட்டைக் கோபுரம் பகுதியில் பேரணி செல்ல, நேற்று திரண்டனர்.அங்கு குவிக்கப்பட்ட போலீசார், 'பேரணிக்கு அனுமதி இல்லை' என தெரிவித்தனர்.இதனால், போராட்ட குழுவினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சில், 1 கி.மீ., துாரத்துக்குள் பேரணியை நடத்தி முடிக்குமாறு, போலீசார் அறிவுறுத்தினர்.
இதன்படி, மொட்டைக் கோபுரம் பகுதியில் துவங்கிய பேரணி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே முடிந்தது. பின், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE