ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், லஷ்கர் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த அபித் வாசா மற்றும் பஷீர் அகமது கோஜர் இருவரும், பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்த இவர்கள், பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கும் திட்டமிட்டு இருந்ததாக, போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE