சென்னை:தமிழகத்தில், நேற்று கொரோனா தொற்றால், 438 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் உள்ள, 257 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 51 ஆயிரத்து, 46 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 438 பேருக்கு தொற்று உறுதியானது. அதிகபட்சமாக, சென்னையில், 139; கோவையில், 47; செங்கல்பட்டில், 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நேற்று மட்டும், 459 பேர் சிகிச்சை முடித்து, வீடு திரும்பினர்.
தற்போது, சென்னையில், 1,594; கோவையில், 408; செங்கல்பட்டில், 388 என, 4,120 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால், நேற்று ஆறு பேர் இறந்தனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE