சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 224 ரூபாய் உயர்ந்தது. சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், சில தினங்களாக குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று உயர்ந்தது.
தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,348 ரூபாய்க்கும்; சவரன், 34 ஆயிரத்து, 784 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 73.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 28 ரூபாய் உயர்ந்து, 4,376 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 224 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 40 காசுகள் உயர்ந்து, 73.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE