சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் நிர்வாகத்தில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க,கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிட்டியின் விசாரணை காலம், 11ம் தேதி முடிந்தது.விசாரணை இன்னும் முடியாததால், அவகாசத்தை நீட்டிக்க, உயர் கல்வி துறைக்கு, கமிட்டி தரப்பில், கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து, கமிட்டியின் கால அவகாசத்தை, மூன்று மாதம் நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE