ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் சேதமடைந்த பாசன மடை வழியாக தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில், 2.5 அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில், பெரும்பாலான பாசன மடைகளின் வழியாக கண்மாய் நீர் வெளியேறி வருவதால் கண்மாய் நீர் வேகமாக குறைந்து வருகின்றன. பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்ய திட்டமிட்ட விவசாயிகளுக்கு இது பின்னடைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE