குறிஞ்சிப்பாடி : வேளாண் துறை தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகளுக்கு கால்நடைத் துறை மூலம், கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தம்பிப்பேட்டை பாளையம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பூவலிங்கம் தலைமை தாங்கினார்.50 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.கால்நடை உதவி மருத்துவர் விமல்ராஜ், குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அனுசுயா, துணை வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரம்யா, அசோக், விஜயசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE