ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில், அரண்மனை அருகே வேளாண் சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லாதலைமை வகித்தார். நகரதலைவர் கோபி முன்னிலை வகித்தார்.மத்திய அரசின் நடவடிக்கையால் விலைவாசி உயர்ந்து மக்கள் சிரமப்படுகின்றனர். டில்லியில்போராடும் விவசாயிகளின் கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக விவசாயிகளில் போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்த ஊர்வலம் செல்ல முயன்ற காங்.,கட்சியினர் 70 பேரை தடுத்து நிறுத்தி டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE