கடலுார் : நெய்வேலியில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நெய்வேலியில் அ.தி.மு.க., சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. சென்னை, கடலுார், கோவை, புதுச்சேரி, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 60 அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் பரிசளிப்பு விழாவில், அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் அபு தலைமை தாங்கினார். கால்பந்துக் கழகச் செயலாளர் ஞானப்பிரகாசம், கணேசன், காமராஜ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சிவமணி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சுழல் கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். விழாவில், ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE