முதுகுளத்துார்: ''கூட்டணி ஆட்சி இல்லாத மாநிலங்களில் காங்., எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., முயற்சிக்கிறது'' என காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.முதுகுளத்துாரில் மேலும் அவர் கூறியதாவது:புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்., கூட்டணி அரசை தான் மக்கள் விரும்புகின்றனர். தெளிவான தீர்ப்பை பா.ஜ.,விற்கு மக்கள் புரியவைப்பார்கள்.தொடர் பெட்ரோல் விலை உயர்வில் சதமடித்து விரைவில் பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டை உயர்த்தி காட்டுவார்கள். பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்., தான் காரணம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. பொருளாதார சீர்கேடுக்கு காரணம் பா.ஜ., அரசு தான்.தி.மு.க.,-காங்., கூட்டணி என்பது புதிது அல்ல. தொகுதி பங்கீடு சுமூகமாக இருக்கும். பாஸ்டேக் என்பது தேசிய அளவில் மகத்தான ஊழல். தேர்தலில் தி.மு.க.,-காங்., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விளையாட்டு வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குவது தான் எங்கள் குறிக்கோள்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE