சிதம்பரம் : கடலுார் தெற்கு மாவட்ட காங்., சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிதம்பரத்தில் விழிப்புணர்வு பாத யாத்திரை நடந்தது.
காங்., மாநில செயலர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் பங்கேற்றார். சிதம்பரம் காமராஜர் சிலை அருகே துவங்கிய பாதயாத்திரை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.பாதயாத்திரையின் போது, விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிச் சென்றனர். தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில் நாதன், பொருளாளர் வெங்கடகிரி, நகர தலைவர்கள் பழனி, டாக்டர் மஞ்சுளா, கண்ணன், விநாயகம், ராஜாராம், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE