ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் வி.சி., கட்சி பங்கேற்கும் தி.மு.க., கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் முகமது யாசின், மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE