ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை தாங்கினார். முடிகண்டநல்லுார் கிளைச் செயலாளர் தங்கசாமி முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு பிரகாஷ் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பேசினார்.தொடர்ந்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். சிங்காரம், தில்லைக்கரசி, பத்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE