விழுப்புரம் : விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் காந்தி மனைவி மகேஸ்வரி,35; இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.இந்த நிலையில், மகேஸ்வரிக்கு 5 ஆண்டிற்கு முன் வயிற்றுவலி ஏற்பட்டதால், குடல்வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பிறகும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி மீண்டும் வயிற்று ஏற்பட்டதால், விரக்தியடைந்த மகேஸ்வரி வீட்டிலிருந்த எலி பேஸ்டை சாப்பிட்டார்.அதனை அறிந்த உறவினர்கள், மகேஸ்வரியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் நேற்று காலை இறந்தார்.விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE