விழுப்புரம் : முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் குழுத்தலைவரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.சென்னையில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் குழுமத்தின், சார்பில் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, குழும தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள், சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE