சிவகங்கை: காளையார்கோவில் சேத்துார் அருகேயுள்ள மூலக்கரை கிராமத்தில் தண்ணீர் பாய்ச்ச மடை இல்லாததால் 20 ஏக்கரில்மிளகாய் பயிர்கள் காய்ந்து கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துஉள்ளனர்.மூலக்கரையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணசாமி கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார்மனு கொடுத்தார். அதில்தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில்உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் சேத்துார் பொதுப்பணித்துறை கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் 3வது மடை பாசனத்தில் 20 ஏக்கர் நிலங்கள் பயன் பெற்று வந்தது. தற்போது 3வது மடை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுஉள்ளது. கிராமத்தில்உள்ள ஆவணங்களில் 3வது மடை இருந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. மடை அழிக்கப்பட்டதால் அதில் பாசன வசதி பெறும் 10 குடும்பங்களின் 20 ஏக்கர் மிளகாய்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகிறது. நடவடிக்கை எடுத்து 3வது மடையை சீரமைப்பு செய்து நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE