பெண்ணாடம் : பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோயம்புத்துார் நேர்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன சேர்மன் காமராஜ் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர்கள் மதன்குமார், வெங்கட் சூர்யா, மதுரைவீரன், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE