திண்டிவனம் : திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இணை பேராசிரியர் முரளி அர்த்தனாரி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குநர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார்.உளவியல் துறை தலைவர் சின்னமுத்து, எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஸ்ரீதர், மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி ஆகியோர் பல்வேறு பயிர்களுக்கான களை மேலாண் குறித்த தகவல்களைஎடுத்துரைத்தனர்.இதில், வேளாண் கல்லுாரி மாணவிகள் இணைந்து களை மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE