கடலுார் : தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சந்தியாகு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில கன்வீனர் கருப்பையன், உறுப்பினர்கள் மோகன், செல்வம், செல்வி, பிச்சைமுத்து, சங்கமேஸ்வரன், சேட்டு, சுரேஷ் வரன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை அகற்றுவது. இடது சாரிகளையும், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது. கோவில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE