செஞ்சி : செஞ்சி காப்பு காட்டில் விவசாயி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி சிறுவாடி காப்பு காட்டில் வழுக்காம்பாறை ஏரிக்கு செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் 40 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார். அருகில் மொபைல் போன், காலி மதுபாட்டில், பூச்சி மருந்து மற்றும் குளிர்பான பாட்டில் கிடந்தன.செஞ்சி போலீசார் விரைந்து சென்று, ஆண் நபர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், உடல் அருகில் செயலிழந்து கிடந்த மொபைல் போனை சரி செய்து, அதில் இருந்த மொபைல் எண்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அதில், இறந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் கருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த ராமு மகன் முருகன்,40: என்பதும், விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் இருப்பது தெரிய வந்தது.குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றதால் மனம் உடைந்த முருகன், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE