திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு திருத்தளிநாதர் கோயிலில் கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் பயிற்சி அளித்தார். கல்வெட்டு எழுத்து அறிதல், படி எடுக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார்.கி.பி.,7ம் நுாற்றாண்டுக்கு முந்தைய பழமையான திருத்தளிநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை படி எடுக்கும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் தனலெட்சுமி எழுத்து வடிவம் குறித்து விளக்கினார்.அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, விலங்கியல் துறை தலைவர் கோபிநாத், வரலாறு துறை பேராசிரியர்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE