மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் --- கோவை இடையே பாசஞ்சர் ரயில் இயக்க, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால், இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் விடப்பட்டுள்ளன. மிகுந்த சிரமத்துக்கு இடையே, பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். அதனால், மேட்டுப்பாளையம் - கோவை இடையே பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் கூறுகையில், ''நமது நாட்டில், பல்வேறு மாநிலங்களில், 'மெமு' பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மாற்றுப் பாதையில் செல்லும்போது, சிரமம் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலை இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE