மரக்காணம் : மரக்காணம் அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டின், பூட்டை உடைத்து 34 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் குமார்,32; ரைஸ்மில் உரிமையாளர். இவரது மகனுக்கு நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால், குமார், வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி சுமதியுடன் புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
அதில், வைத்திருந்த 34 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மரக்காணம் பகுதியில் நான்காவது இடத்தில் திருட்டு நடந்திருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE