ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லுாரில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, உழவர் மன்ற தலைவர் பரமானந்தம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார் கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம், உதவி தோட்டக்கலை அலுவலர் அடைக்கலசாமி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.முகாமில், காய்கறி மற்றும் பழ வகைகளில் ஏற்படும் நோய் தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விளக்கமளித்து பேசினர். ஆத்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் சந்தான கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE