புவனகிரி : புவனகிரியில் உடல்நலக் குறைவால் வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 47; சொந்தமாக வேன் ஓட்டி வந்தார். உடல்நலக் குறைவால் இரு முறை ஆஞ்சியோ செய்துள்ளார். இருப்பினும் வேன் ஓட்டி வந்தார்.நேற்று முன்தினம், திடீரென நெஞ்சுவலி அதிகமானதால், மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து வேனில் மயங்கி விழுந்தார்.உடன் அருகில் இருந்த சக டிரைவர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜாராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE