விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளர் ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் முருகையன் பாபு ஆலோசனை வழங்கினார். நகர தலைவர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், சேகர், தனசேகர், முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பூத் கமிட்டி முகவர்கள் படிவங்கள் ஒப்படைக்கப்பட்டன. தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்த நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் தனியாக இரண்டு பொறுப்பாளர்கள் மற்றும் 10 பூத்களுக்கு ஒரு தனி பொறுப்பாளர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், தொகுதி முழுதும் சுவர் விளம்பரம் செய்ய தனிக்குழு அமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருத்தாசலம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE