கடலுார் : கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது.
கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஒரு விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகள் திடீரென மர்மமான முறையில் எரிந்தது.தகவலறிந்த கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE