சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா நடந்தது.
தேவநேய பாவணர் பிறந்த நாள், உலக தாய் மொழி நாள், சிங்கார வேலர் பிறந்த நாள், தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புலவர் ஆராவமுதன் தலைமை தாங்கினார். சைவ சிந்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், டாக்டர் நெடுஞ்செழியன், சங்கை தமிழ் சங்க பொருளாளர் கோபால் முன்னிலை வகித்தனர். தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் செம்பியன் வரவேற்றார். நல்லாசிரியர் முகமது உசேன் விழாவை துவக்கி வைத்தார்.கவிஞர் செல்லமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகம், புலவர் ஜெயகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜயன் பரிசு வழங்கினார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் கோவிந்தராஜன், பரிக்கல் சந்திரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில் வணிகர் பேரவை மாவட்ட பொருளர் முத்துக்கருப்பன், சிவஞான அடிகள், ஓவியர் கலைச்செழியன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, சங்கை தமிழ் சங்க செயலாளர் சாதிக், கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் பேசினர்.சங்கச் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE