தென்காசி:-பணத்தகராறில் பாட்டி மற்றும் பேத்தியை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது.
தென்காசி, கீழப்புலியூரைச் சேர்ந்தவர் கோமதியம்மாள், 55. இவரது மகள் சீதாலட்சுமி, 25. பேரன் மணீஷ், 6; பேத்தி உத்ரா, 1 ஆகியோருடன் வசித்து வந்தார். கோமதி, உத்ரா ஜன., 12 முதல் காணாமல் போயினர். குற்றாலம் போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று தென்காசி, மத்தளம்பாறை அருகே காட்டுப் பகுதியில்,சாக்கு மூட்டையில் இரு உடல்கள் இருப்பது குறித்து தகவல் வந்தது.
பாவூர்சத்திரம் போலீசார் விசாரணையில், காணாமல் போன கோமதியும், பேத்தியும் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.அவர் கடைசியாக பேசிய அலைபேசி எண்ணை கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியம்மாள் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.கோமதியிடம் வட்டிக்கு பணம் வாங்கிய அவர், திரும்ப தரவில்லை. இதனால், பணத்தை கேட்டு கோமதி, தன் பேத்தியுடன் வீரபாண்டியம்மாள் வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஏற்பட்ட தகராறில், உறவினர்களின் உதவியோடு பாட்டி மற்றும் பேத்தியை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிந்தது.இது தொடர்பாக, வீரபாண்டியம்மாளிடம் தீவிர விசாரணை நடக்கிறது. மேலும், உறவினர்கள் சிலரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE