கிள்ளை : சி.கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில், பகுதி நேர ரேஷன் அமைத்துத்தர கலெக்டருக்கு, ஊராட்சித் தலைவர் அம்சா வேணுகோபால் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மனு விபரம்:சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தின் கீழ், சி.கொத்தங்குடி ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு, முத்தையா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட நகர்களில் இருந்து, ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.இப்பகுதியினர், ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., வர வேண்டியுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரிக்குச் செல்லும் சாலை, போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.
இந்த சாலையை, பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து வந்து பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.எனவே, சி.கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில், பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE