புவனகிரி : புவனகிரியில், விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடம் நடந்தது.
எம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சாக்காங்குடி ஊராட்சித் தலைவர் பிரபாகரன் தலைமைதாங்கினார். ஆதிவராக நல்லுார் ஊராட்சித் தலைவர் ஜோதி நாகலிங்கம் வரவேற்றார்.வர்த்தக சங்க பொதுச் செயலாளர் ரத்தின சுப்ரமணியன், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், சாக்காங்குடி ஊராட்சி துணைத் தலைவர் சரவணன், விவசாய அணித் தலைவர் ஆண்டவர் முன்னிலைவகித்தனர்.தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் முகம்மது ரபி, அமிர்த கணேசன், இலியாஸ் பாஷா ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடல் நீரால் பாதிக்கப்பட்டுள்ள 25 கிராமங்களை பாதுகாக்க புவனகிரி ஆதிவராகநத்தத்தில் தடுப்பணை கட்ட சட்டசபை நிதி நிலை அறிக்கையில், நிதி ஒதுக்க தமிழக அரசை வலியுறுத்தி பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE