சிதம்பரம் : காஸ் விலை உயர்வை கண்டித்து, சிதம்பரத்தில் மா.கம்யூ.,வினர் சிலிண்டருக்கு பாடை கட்டி நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே, பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் முத்து தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், ராமமூர்த்தி, அஷ்ரப் அலி, ஜின்னா, அமுதா, மல்லிகா, செந்தில், கோபால், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE