நெல்லிக்குப்பம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லிக்குப்பம் மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் ஜாபர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஷேக்தாவூத் கண்டன உரையாற்றினார். வாடகை ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE