நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நித்திரவிளையில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு இருந்தது. சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரித்தனர்.
சின்னத்துறை செபாஸ்டின் தெருவை சேர்ந்த ஆபிரகாம் மகன் அபின் என்ற வினோத் 24, என்பவரை கைது செய்தனர்.விசாரணையில் பி.ஏ. படித்துள்ள வினோத் செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கிறார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE