வில்லியனுார், : வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அதிரடியால் நகர பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்துச் சென்றனர்.
வில்லியனுார் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. ஆணையர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் தமிழக பகுதியை சேர்ந்த பன்றி பிடிக்கும் சிறப்பு குழுவினர் வில்லியனுாரில் முகாமிட்டு பன்றிகளை பிடித்தனர்.வில்லியனுார் போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை வில்லியனுார், ஜி.என்.பாளையம், சுல்தான் பேட்டை, முத்துப்பிள்ளைபாளையம், சிவகணபதி நகர் உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்தனர். பிடித்த பன்றிகளை தொழுதுார் பகுதியில் உள்ள காப்புக்காட்டு பகுதி யில் விட மினி லாரியில் ஏற்றிச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE