புதுச்சேரி : புதுச்சேரி அரசு பெண் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் சங்கத்தினருடன் இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பால மோகனன், சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கீதா, பொதுச் செயலாளர் முனுசாமி, அமைப்புச் செயலாளர் ஜெகநாதன், செயலாளர் ஜவகர், அரசு பெண் சுகாதார மேற்பார்வையாளர் கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் சங்க தலைவர் லட்சுமி, செயலாளர் கலைவாணி பங்கேற்றனர்.இதில், கேடர்களை மாற்றியமைக்க வேண்டும்.
காலியாக உள்ள ஏ.என்.எம்.,பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாதந்தோறும் தாமதமின்றி தடையின்றி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE