கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் நடிகர் ரஜினி அண்ணன் சத்யநாராயணன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நடிகர் ரஜினி திருமண நாள் பிப்., 26ல் கொண்டாடப்படுவதையொட்டி அவரது ரசிகர்கள் சார்பில் ஏர்வாடி தர்காவில் நேற்று மாலை 5:30 மணிக்கு பேரிச்சம்பழம், இனிப்பு வைக்கப்பட்டது. சிறப்பு மவுலீதினை சர்வரே ஆலம் ஓதினார்.
நடிகர் ரஜினி அண்ணன் சத்யநாராயணன், கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த், ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., மதுரை குமரவேல், கோவை ஜே.பி. சண்முகம், ராமநாதபுரம் ஆர்.பி. பாலநமச்சிவாயன் உள்ளிட்ட ரசிகர்கள் பங்கேற்றனர். ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்துகின்றனர். மும்மத வழிபாடு பிரசாதம் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE