புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக, மாற்றுத்திறனாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குப்பம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா, 41; மாற்றுத் திறனாளியான இவர் விவசாய கூலி வேலை செய்தார். இவரது மனைவி காந்திமதி, 34; இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பேசுவ தில்லை. நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, அறைக்கு சென்ற சிவா, அதிகாலையில் புடவையால் துாக்கில் தொங்கியுள்ளார். சிவாவை மீட்டு, கதிர்காமம் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE