புதுச்சேரி : கணவன், மனைவி சண்டையை தடுக்க சென்ற தட்டுவண்டி தொழிலாளிக்கு மண்டை உடைந்தது.
புதுச்சேரி வாணரப்பேட்டை, பிரான்சுவா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 45; தட்டு வண்டி தொழிலாளி. கடந்த 16ம் தேதி காலை, வீட்டின் முன்பு சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மனைவி கீதாவிடம் தகராறு செய்து அடித்தார். இதை கண்ணன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த ஜெயராஜ், கண்ணனை திட்டி, தாக்கினார். பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.கண்ணன் அளித்த புகாரின்பேரில், ஒதியஞ்சாலை போலீசார் ஜெயராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE