கோவை:கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தக்கோரி, கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில், தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம், செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று நடந்தது.பள்ளிகளில் துவக்க நிலையில் தமிழ்மொழி கல்வி வழங்க வேண்டும்; வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழே ஆட்சி மொழி, அலுவல் மொழியாக அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.கோவில்களில் தமிழ் வழிபாடு; குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்; வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்; தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்கு, 80 சதவீத அரசு பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE