திருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் மாவட்ட பெண்கள் வாலிபால் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும், 24 முதல், 26ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்க உள்ள மாவட்ட வாலிபால் பெண்கள் அணிக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது. மாநில வாலிபால் அணி துணை சேர்மன் ரங்கசாமி, துணை செயலாளர் சண்முகசுந்தரம், தேர்வுக்குழு உறுப்பினர் தேவராஜ் அணியை வாழ்த்தி வழியனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE