கள்ளக்குறிச்சி : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் .
கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ரங்கநாதன்,33; இவர் கடந்த 17ம் தேதி, வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என அதே கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் பாண்டுரங்கன், 48; சிறுமியை மிரட்டியுள்ளார்.மறுநாள் காலை சிறுமியை அவரது தாய் குளிப்பாட்டிய போது, உடலில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்து கேட்டுள்ளார்.
அப்போது சிறுமி நடந்தவற்றை கூறினார். அதிர்ச்சிடைந்த அவர், சிறுமியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ரங்கநாதன், பாண்டுரங்கன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE