பரமக்குடி:''நல்ல அரசு என மக்கள் கூறும் நிலையில், ஓட்டு வங்கிக்காக அ.தி.மு.க.,வை அடிமை, பினாமி அரசு என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்,'' என, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அவர் கூறியதாவது: நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், காவிரி - வைகை -- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பொய், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்.தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளை, முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
தேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பு, 30 நாட்களில் வரும் என பரமக்குடியில் முதல்வர் பேசினார். பிரதமர், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை, ஓட்டு வங்கி அரசியலாக பார்க்க கூடாது.நல்ல அரசு என மக்கள் கூறும் நிலையில், ஓட்டு வங்கிக்காக, அ.தி.மு.க.,வை அடிமை, பினாமி அரசு என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE