திருப்பூர்:'நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, காங்., - எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, ராகுல் அனுப்பிய கடிதம்: திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நுால் விலை கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை தேவையை பூர்த்தி செய்யும் அளவு, நுாலிழை உற்பத்தி செய்யப்படுவதில்லை. பின்னலாடை குறு, சிறு நிறுவனங்களுக்கான நுால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
போட்டி நாடுகளுக்கு நுாலிழை ஏற்றுமதி செய்வதால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மத்திய அரசு, நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, நுால் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சீரான வளர்ச்சி பெறவும், சர்வதேச போட்டியை சமாளிக்கவும், மத்திய அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE