சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியில், இன்று முதல், விருப்ப மனு தாக்கல் துவங்குகிறது.
நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி, மூன்றாண்டு முடிந்துள்ளது. நான்காம் ஆண்டு துவக்க விழா மாநாடு நடத்த, கமல் திட்டமிட்டுஇருந்தார். போலீஸ் அனுமதி கிடைக்காததால், மார்ச், 7ம் தேதிக்கு, மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.
சென்னை, தாம்பரம் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடக்கிறது. இதில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், கூட்டணி முடிவுகளை, கமல் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE