தங்கவயல் : ''எம்.ஜி.மார்க்கெட் வியாபாரிகளிடம், ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கூறியது கண்டிக்கத்தக்கது. ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க வேண்டும்,'' என பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ, சம்பங்கி கெடு விதித்துள்ளார்.
தங்கவயல் பிரஸ் பவனில் அவர் அளித்த பேட்டி:தங்கவயல், ராபர்ட்சன்பேட்டை நகராட்சி வருவாய் அதிகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், நகராட்சி கடைகளை, இ - டெண்டர் விட, திட்டமிடப்பட்டது.இவ்வாறு செய்தால், வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகள் கிடைக்காது. அரசு நிர்ணயிக்கும் டெபாசிட், வாடகை செலுத்த தயாராக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. பெமலும் சிக்கலில் உள்ளது. தங்கவயல் வியாபாரிகளின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு, முயற்சிகள் மேற்கொண்டோம்.
தங்கவயல் வியாபாரிகள் நலனுக்காக உதவியாக இருந்துள்ளோம். ஆனால், ஓட்டு அரசியலுக்காக, காங்கிரசார், பொய்களை சொல்லி வருகின்றனர்.நகராட்சி கடைகள் விவகாரமாக, சட்டசபையில் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேசினார். எம்.ஜி.மார்க்கெட் கடைக்காரர்களிடம், பா.ஜ.,வினர், ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கூறியுள்ளார்.லஞ்சம் வாங்கியது யார் என்பதை, வரும் 22 ல் தங்கவயல் வருகை தரும், நகராட்சித்துறை அமைச்சர் நாகராஜ் முன், உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE