சென்னை:ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடுவது தொடர்பான அறிவிப்பை, இன்று வெளியிட உள்ளார்.
அரசு பணியில் இருந்த போது, தான் பணிபுரிந்த அலுவலகங்களில், 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என, எழுதி வைத்ததுடன், நேர்மையாக பணியாற்றி, அனைவருடைய பாராட்டையும் பெற்றவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்.அவர், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்து, அரசியலில் நுழைவார் என, தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தன் அரசியல் நிலைப்பாட்டை, இன்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள, ஜே.பி.பாரடைஸ் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், சகாயம் அறிவிக்க உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE